புதுக்கவிதை யின் வரலாறு புதுக்கவிதை : கவிதை எனப்படுவது சொற்களில் உணர்ச்சியும், கற்பனையும் கொண்டு இயற்றப்படுவதாகும். இதில் உணர்ச்சிகள் நயமாக காட்டப்படும். கவிதை இரு வகைப்படும். மரபுக் கவிதை மற்றொன்று புதுக்கவிதையாகும். புதுக்கவிதை என்பது மரபுக்கவிதையைவிட ஒரு சில கூறுகளில் மாறுப்பட்டதாகும். இவ்வளவு அடிகளில் தான் பாட வேண்டும் என்ற கட்டுப்பாடு புதுக்கவிதைக்கு இல்லை. இந்தப் பா வகையில் தான் பாட வேண்டும் என்ற மரபும் இல்லை. எதையும் எவ்வளவு அடியிலும் எவரும் பாடலாம் என்பதே புதுக்கவிதயின் தனிச்சிறப்பாகும். எனவே தான், இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு மோனைத் தேர்கள் தனிமொழிச் சேனை பண்டித பவனி இவையெதுவும் இல்லாத கருத்துக்கள் தம்மைத்தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை (ஊர்வலம்) என்று, புதுக்கவிதைக்கு இலக்கணமாக மு.மேத்தா கூறுகிறார். புதுக்கவிதை படிப்பதற்கு எளிமையாக இருக்கும். அதனையடுத்து, புதுமையுடன் வாசகர்களுக்குப்...
தலைமை தாங்கும் தமிழ் முன்னுரை : சுரதா (23, நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். இவர் இயற்றிய தலைமை தாங்கும் தமிழ் என்ற கவிதை குறித்து இங்கு காண்போம். உலகத்தின் தலைமை மொழி: படுத்திருக்கும் வினாக்குறிப்போல் மீசை வைத்த பாண்டியர்கள் வளர்த்த மொழி கடலின் நீரை உடுத்திருக்கும் உலகத்தில் தலைமை தாங்கும் உயர்ந்த மொழி என்று தமிழ் மொழியை உயர்வாகப் பாடுகிறார் உவமைக் கவிஞர் சுரதா. மூவேந்தர்களில் முதல் வேந்தராகியப் பாண்டியர்கள் வீரத்தில் சிறந்தவர்கள். வீரத்தின் அடையாளமாக தங்கள் முகத்தில் அவர்கள் வைத்திருக்கும் மீசை ஒரு வினாக்குறி படுத்திருப்பது போல இருக்கும் என்று தனக்கே உரிய உவமைக்...
விலை - பொருளின் மதிப்பு விளை - உண்டாக்குதல் விழை - விரும்பு இலை - செடியின் இலை இளை - மெலிந்து போதல் இழை - நூல் இழை ஒலி - சப்தம் ஒளி - வெளிச்சம் ஒழி - நீக்கு கலி- துன்பம் களி - மகிழ்ச்சி கழி - தடி வலி - துன்பம், வேதனை வளி - காற்று வழி - பாதை தலை- உறுப்பு தளை - கட்டு தழை -
Comments
Post a Comment