புதுக்கவிதை வரலாறு
புதுக்கவிதை யின் வரலாறு புதுக்கவிதை : கவிதை எனப்படுவது சொற்களில் உணர்ச்சியும், கற்பனையும் கொண்டு இயற்றப்படுவதாகும். இதில் உணர்ச்சிகள் நயமாக காட்டப்படும். கவிதை இரு வகைப்படும். மரபுக் கவிதை மற்றொன்று புதுக்கவிதையாகும். புதுக்கவிதை என்பது மரபுக்கவிதையைவிட ஒரு சில கூறுகளில் மாறுப்பட்டதாகும். இவ்வளவு அடிகளில் தான் பாட வேண்டும் என்ற கட்டுப்பாடு புதுக்கவிதைக்கு இல்லை. இந்தப் பா வகையில் தான் பாட வேண்டும் என்ற மரபும் இல்லை. எதையும் எவ்வளவு அடியிலும் எவரும் பாடலாம் என்பதே புதுக்கவிதயின் தனிச்சிறப்பாகும். எனவே தான், இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு மோனைத் தேர்கள் தனிமொழிச் சேனை பண்டித பவனி இவையெதுவும் இல்லாத கருத்துக்கள் தம்மைத்தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை (ஊர்வலம்) என்று, புதுக்கவிதைக்கு இலக்கணமாக மு.மேத்தா கூறுகிறார். புதுக்கவிதை படிப்பதற்கு எளிமையாக இருக்கும். அதனையடுத்து, புதுமையுடன் வாசகர்களுக்குப் புரிய வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டிருக்கும். புதுக்கவிதையைப் படிக்கும் பொழுது பெரும